About Me

My photo
இதுவரை சொல்லிகொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வளர ஆசை......

Tuesday, January 31, 2012

மனிதா மனிதா உலகில் எத்தனை பசி.........


சோற்று பசி தீர்ந்து விட்டால் போதும் என்பாய்,
உடனே காதல் பசி நீ கொள்வாய்,
காதல் பசி தீர்ந்து விட்டால் போதும் என்பாய்,
உடனே காசு பசி நீ கொள்வாய்,
காசு பசி தீர்ந்தால் பதவி பசி கொள்வாய்,
பதவி பசி போனால் புகழ் பசி கொள்வாய்,
இந்த மனிதன் கொண்ட பசியோ அது முடிந்து போவதில்லை,
இந்த மண் கொண்ட பசியோ ரொம்ப வாழ விட்டதில்லை,
இந்த உலகம் பேசும் ஒரே பாசை பசி தான்..............................

Wednesday, January 18, 2012

இதுவரை யாரும் பாடியதில்லை இது போல..............


மேகமதை தூது விட்டால் பாதி வழி போகும் முன்பே தூறல்களாய் மாறிவிடும் என்று எண்ணி பயந்தாயா,
அன்னமதை தூது விட்டால் மெல்ல மெல்ல ஆடிச்செல்லும் தாமதமாய் ஆகிவிடும் என்று அதை தவிர்த்தாயா,
என்னுயிரே நிலவினை தூதென அனுப்பி வைத்தால் பகலினில் பதுங்கிடும் என நினைத்தா,
என்னை இன்று தூதை அனுப்பிவிட்டு இதயத்தில் இடிகளை இறக்கி வைத்தாய்................

Tuesday, January 17, 2012

என் அழகென்ன என் தொழிலென்ன.......


என் அழகென்ன என் தொழிலென்ன ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு,
சிறு தண்ணீராய் நான் தவழ்ந்தேனே இதில் எப்போது மின்சாரம் உண்டாச்சு,
பெண்ணே, பெண்ணே, ராவோடும் பகலோடும் உந்தன் ஞாபகத்தொல்லை,
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை,
இது சரியாய் தவறா என்பதை சொல்ல சாஸ்த்திரத்தில் இடமில்லை.............

Wednesday, January 11, 2012

உள்ளமே உனக்குத்தான் உசிரே உனக்குத்தான்.......


உள்ளமே உனக்குத்தான் உசிரே உனக்குத்தான்,
உன்னையும் என்னையும் பிரிச்சா உலகமில்லை,
தண்ணிக்கும் மீனுக்கும் எண்டிக்கும் வில்லங்கமில்லை,
வாழ்ந்ததால் உன்னோடு மட்டுமே வாழுவேன்,
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்..................

துரோகம் துரோகம் துரோகம்........


நீ வாய் திறந்து கேட்டிருந்தால் உயிரை கூட கொடுத்திருப்பேன்,
நீ ஒரு பார்வை பார்த்திருந்தால் என்னை நானே எரித்திருப்பேன்,
அழித்திடவா என்னை வளர்த்து விட்டாய்,
நரம்புக்குள் நெருப்பு எரிகிறதே,
நகம் என்று நினைத்து நறுக்கி  விட்டாய்,
விரல்கள் எனக்கு வலிக்கிறதே................................

Thursday, January 5, 2012

தாய் மடியே உன்னை தேடுகிறேன்.......



தாய் மடியே உன்னை தேடுகிறேன் தாரகையும் உருக பாடுகிறேன்,
பத்து திங்கள் என்னை சுமந்தாயே ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தாள் தாயே,
நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு இன்று தெருவில் கிடக்கிறது பார் தாயே,
உதிரம் வெளியேறும்  காயங்களில் என் உயிரும் வழிந்தோட முன் வா  தாயே,
தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கிறேன்...............

உலகம் ஒரு வாடகை வீடு........


வேண்டாத பாசம் வரவேற்ற பாவம்,
விடியாமல் போச்சே என் வானம் தான்,
மீட்டாத வீணை நான் மீட்டும் வேளை,
முடியாமல் போச்சே என் கானம் தான்,
தேன் வார்த்த முல்லை என்னோடு இல்லை,
கடந்தாச்சு எல்லை நேற்றோடு தான்,
இருந்தது ஒரு கிளி பறந்தது தனி வழி.................

மனிதன் மனிதன்..........


வாழும் போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா,
வாழ்ந்த பின்னும் பெயரை நாட்டி நிலைப்பவன் மனிதனா,
பிறருக்காக கண்ணீரும் சிலருக்காக செந்நீரும் சிந்தும் மனிதன்,
அவனே மனிதன் மனிதன் மனிதன் மனிதன்..................
அடுத்த வீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா,
அந்த நேரம் ஓடி வந்து அணைப்பவன் மனிதனா,.................

இங்கு ஆடும் வரை ஆட்டமுண்டு கண்மணி.......


இங்கு ஆடும் வரை ஆட்டமுண்டு கண்மணி,
அவன் ஆட்டுவித்தால் ஆடுகின்றோம் கண்மணி,
இதில் காயமென்ன மாயமென்ன கண்மணி,
நீயும் கண் கலங்கி ஆவதென்ன கண்மணி,
என்ன ஆனாலும் உண்மை மாறாது,
வெள்ளம் மேல் நோக்கி என்றும் பாயாது,
துன்பம் ஒரு பாதி மறு பாதி சுகம் தானம்மா............

நான் பொறந்தது தனியா வளந்தது தனியா........



மடி மீது வளர்த்த பிள்ளை அடித்தாலும் வலிப்பதில்லை,
அது போல நானும் உந்தன் சொல்லை தாங்கினேன்,
எவன் மீதும் வருத்தமில்லை, அவன் மீதும் வருத்தமில்லை,
விதி என்று நானும் இங்கு எண்ணி தேற்றினேன்,..........
எத்தனையோ பட்சி வந்து தங்கி செல்லுது
அவை ஒன்றுக்கொன்று சொந்தம் என்றா சொல்லிக்கொள்ளுது.............

எங்கே நிம்மதி, நிம்மதி என்று தேடி..............



பள்ளிக்கூடம் படிக்கும் போது பாடத்திலே நிம்மதியில்லை,
பாடமின்றி விடுமுறை என்றால் காசு இன்றி நிம்மதியில்லை,
காசுக்காக மேலே படிக்க கல்லூரியில் சீற்றும் இல்லை,
சீற்றும் கிடைத்து பட்டமும் கிடைத்தால் வேலையின்றி நிம்மதியில்லை,
கவலை மறக்க வெளியே சென்றால் பெண்ணை கண்டு நிம்மதியில்லை,
பெண்ணை நினைத்து படுப்போம் என்றால் கனவினிலும் நிம்மதியில்லை,
அலை போலே அலைந்தாடும் மனதுக்கு இங்கே நிம்மதியில்லை,
கொஞ்சம் நிம்மதி வருமா....................................................

Wednesday, January 4, 2012

வலி வலி காதல் வலி.......


கருவறையில் காதலை விதைத்து தெருவறையில் காதலை சிதைத்தால்
யார் மீது குற்றம் சுமத்துவதோ,
உடலுக்குள்ளே இதயத்தை வைத்து இதயத்திலே காதலை புதைத்தால்
உலகத்துக்கு உண்மை தெரியாதோ,
அட பிரிவு என்னும் நோயினையும் கொடுத்தது ஏன் என்று கேளுங்களேன்,
பிரிவினையே அடைவதனால் காதலும் சாகுமா கூறுங்களேன்,
நானும் துறவியில்லை, வேறு பிறவியில்லை................



வாய்ப்பேச்சு போதும் என்று நினைக்காதே....



பிறந்த பயனை எண்ணி வாழ்பவன் ஞானியடா,
பிறரை கெடுத்து வாழும் மனிதன் பாவியடா,
கேட்டதை கொடுக்கும் போது கர்ணன் என்று பெயர் எடுப்பான்,
கேள்விகள கேட்டுபுட்டா கர்மன் என்று தூற்றிடுவான்,
நல்லவன் எப்போதும் கெட்டதில்லையடா,
உண்மைகள் எப்போதும் எப்போதும் செத்ததில்லையடா,
பொய்யான வாழ்கைய மெய்யாக நினைச்சு,
நன்மைக்கும், உண்மைக்கும் துரோகங்கள் செய்து,
ஓசி சோத்தில் உடல் வளர்த்தால் ஓசியில உசிரு போகும்..................

அடி நான் புடிச்ச கிளியே....



கட்டு கட்டா புத்தகத்தை சுமக்கவில்லை நானடி,
ஆனாலும் தான் கெட்ட வழி போனதில்லை நானடி,
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள ஆளு நானடி,
என்னை பற்றி ஊருக்குள்ளே நீயும் கொஞ்சம் கேளடி,
படிப்பு ஒன்னே வாழ்க்கையா பாசம் வந்து இல்லையா,
படிப்பில்லாமல் வாழ்கையில் உயர்ந்த மேதை இல்லையா,
உன்னை கண் போல தான் வைச்சு காப்பேனடி,
அடி உன்னை தான் புடிச்சேன், உன்னை தான் நினைச்சேன் உன்னையே மணப்பேன்.............

Tuesday, January 3, 2012

முள்ளாக குத்தக்கூடாது.................



மறக்க தான் நீ சொன்னாய் முடியலடி,
முயற்சி தான் செய்தும் மனம் கேக்கலடி,
பறிக்காதே எனை என்று ஒரு பூ சொல்லுது,
கேட்காமல் மனம் தானே பெண் பின் செல்லுது,
முட்டாள் மனம் போகாதடி, போனால் மனம் விரும்பாதடி,
நீ எரிக்கின்ற நெருப்பாலே வெண்சங்கை சுட்டாலும் நிறம் மாறுமா,
பெண்ணும் தான் வெறுப்பாலே என் நெஞ்சை சுட்டாலும் மனம் மாறுமா..............

உனக்கென உனக்கென பிறந்தேனே....



கடலாக நீயும் மாறினால் அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்,
நெருப்பாக நீயும் மாறினால் அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்,
பகல் தீபமாகி ஆகாய நிலவை உறவோடு பார்க்கிறேன்,
அடி பொய் என்ற போதும் உன்னோடு பேசும் கனவுகள் வேண்டுகிறேன்....

பெண் கிளியே பெண் கிளியே........


நிகழ்ந்ததை எல்லாமே கனவாய் மறப்பயா,
நிகழ்வதை நினைத்தே தான் வாழ்வை தொடர்வாயா,
உன் கண்ணிலே நீர்த்துளி சேருமா,
உன் நெஞ்சிலே மீண்டும் பூ பூக்குமா,
உன் வானிலே வானவில் தோன்றுமா,
உன் வாழ்கையில் வண்ணமாய் மாறுமா,
விதி செய்த சதியாலே,
உந்தன் வாழ்வோடு தடுமாற்றமே,
உயிர் கொண்ட உறவாலே உந்தன் ஏதிர்பார்ப்பில் ஏமாற்றமே,
காலம் மெல்ல மெல்ல புரிந்திடுமா,
உன் கோலம் மாறி விட வழி தருமா,

மரத்த வைச்சவன் தண்ணி............


ஏ மனமே கலங்காதே வீணாக வருந்தாதே,
பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்..
படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு,
இதயத்திலே துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்கு............



ஒரு முறை பிறந்தேன் ஒரு........



உந்தன்  நெற்றி மீதிலே துளி வேர்வை வரலாகுமா,
சின்னதாக நீயும் தான் முகம் சுழித்தால் மனம் தங்குமா,
உன் கண்ணிலே துளி நீரையும் நீ சிந்தவும் விட மாட்டேன்,
 உன் நிழலையும் தரை  மீதிலே நடமாடவும் விட மாட்டேன்.........

Monday, January 2, 2012

விடை கொடு விடை கொடு விழியே.....



உள்ளங்கையில் நானே
உயிரை ஊற்றி பார்த்தேன்
போவதாய் வருகிறாய்
நுாறு முறை தானே
இன்றே
விடைகொடு என்றுனை
கேட்கிற வார்த்தையை
மௌனத்தில் இடறுகிறாய்
உள்ளே நடைபெறும் நாடகம்
திரைவிழும் நேரத்தில்
மேடையில தோன்றுகிறாய்
தனித்தனி காயமாய்
ரணப்பட தோனுதே
இடைவெளி கேள்வியாய்
ஆகிறதே.................

கூடு எங்கே தேடி கிளி ரெண்டு.........



கோபமாய் பேசினேன் வார்த்தையை வீசினேன் உன்னை வாயடி பெண்ணாக என்று,
காலங்கள் தந்திடும் காயங்கள் தாங்கினேன் உன் சொல்கூட அது போல ஒன்று,
பூந்தோகையே சொன்ன என் வார்த்தையே உன்னை அறியாமல் நான் சொன்ன மொழிதானம்மா,
என் சோகமே என்றும் என்னோடுதான் எந்தன் சுமைதாங்கி எந்நாளும் நான் தானையா.............

தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு....



வரும் துன்பம் ஏற்க முடியாது என்று எவனாலும் சொல்ல முடியாது போடா, வருவதை எல்லாம் ஏற்றுக்கொள்.................

அது ஒரு காலம் அழகிய காலம்.....



உலகம் என்பது மேடை
தினமும் நடனமாடு
புதிதாய் ததும்பும் நதிபோல ஓடு
நெஞ்சோடு பாரம் தந்தால்
தூரத்தில் தூக்கி போடு............................

கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா....



பிறரின் முகம் காட்டும் கண்ணாடி அதற்கு முகம் ஒன்றும் இல்லை,
அந்த கண்ணாடி நான் தானே, முகமே இல்லை என்னிடம் வா,
காகிதத்தில் செய்த பூவுக்கும் என் மனதுக்கும் ஒற்றுமை இருக்கிறதோ,
இரண்டுமே பூஜைக்கு போகாதோ.................

Sunday, January 1, 2012

NEW YEAR WISH



அன்பு நண்பர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இப்புதிய ஆண்டு அனைவருக்கும் சந்தோசமானதகவும், வளமானதாகவும் அமைய வாழ்த்துகிறேன்.