பள்ளிக்கூடம் படிக்கும் போது பாடத்திலே நிம்மதியில்லை,
பாடமின்றி விடுமுறை என்றால் காசு இன்றி நிம்மதியில்லை,
காசுக்காக மேலே படிக்க கல்லூரியில் சீற்றும் இல்லை,
சீற்றும் கிடைத்து பட்டமும் கிடைத்தால் வேலையின்றி நிம்மதியில்லை,
கவலை மறக்க வெளியே சென்றால் பெண்ணை கண்டு நிம்மதியில்லை,
பெண்ணை நினைத்து படுப்போம் என்றால் கனவினிலும் நிம்மதியில்லை,
அலை போலே அலைந்தாடும் மனதுக்கு இங்கே நிம்மதியில்லை,
கொஞ்சம் நிம்மதி வருமா....................................................
தாயின் துன்பம் தீர்ப்போம் என்று வேலைக்காக வேஷம் போட்டேன்
ReplyDeleteவாயில் வந்த பேரைச்சொல்லி நல்ல பேரை வாங்கிக்கொண்டேன்
வந்த இடத்தில் வாலிப வயது வழக்கம்போல வேலையைக்காட்ட
மந்தகார புன்னகையாலே கன்னியவளும் காதலைச்சொல்ல
நொந்து போன மனதுக்குள்ளே வந்து வந்து போகும் பிளவு
இந்த நிலையில் எவனிருந்தாலும் ஆகவேண்டும் அவனே துறவி
இருந்தாலும் போனாலும் நிம்மதி வருமா ?மனுஷனுக்கு நிம்மதி வருமா ?