மேகமதை தூது விட்டால் பாதி வழி போகும் முன்பே தூறல்களாய் மாறிவிடும் என்று எண்ணி பயந்தாயா,
அன்னமதை தூது விட்டால் மெல்ல மெல்ல ஆடிச்செல்லும் தாமதமாய் ஆகிவிடும் என்று அதை தவிர்த்தாயா,
என்னுயிரே நிலவினை தூதென அனுப்பி வைத்தால் பகலினில் பதுங்கிடும் என நினைத்தா,
என்னை இன்று தூதை அனுப்பிவிட்டு இதயத்தில் இடிகளை இறக்கி வைத்தாய்................
வங்கக்கடல் ஆழம் அல்ல வானகக்கரை நீளம் அல்ல,
ReplyDeleteகாதல் கடல், காதல் கடல் ஆழத்தினை யார் சொல்ல,
பெண்ணின் மனம் ஆழமென்று சொன்னவர்கள் கோடி உண்டு,
ஆணின் மன ஆழத்தினை சொன்னவர்கள் யாருண்டு,
என்னுயிரே மனதுக்குள் இருப்பதை வெளியிடவா,
உயிருக்குள் காதலை மறைத்திடவா,
மறுமுறை உனக்கென பிறந்திடவா,
அதுவரை தனிமையில் அழுதிடவா,
ஒரு முறை வாழ்க்கை ஒரு முறை காதல்,
உனக்கென வாழ்ந்தால் அர்த்தமாகுமே.............